உபத்திரவப்படுவதே கிறிஸ்தவ வாழ்க்கை, அதிலும் இலங்கையில் விஷேடம்.
கிறிஸ்தவ போதனையை தொடர்பவர்கள் மீது உலகெங்கும் வெறுப்பு உண்டு இதில் இலங்கை விதிவிலக்கல்ல.
பொது மக்களை ஏவி கிறிஸ்தவர்கள் மீது வன்முறையை கையாள்வது கொஸ்வத்தையில் மாத்திரமல்ல இலங்கையின் பல பகுதிகளிலும் இடம் பெற்றது.
காலி பகுதியில் கிறிஸ்தவ சபை மீது குறிப்பிட்ட கட்சி ஒன்று உபத்திரவம் கொடுத்ததுடன், ஒரு பாதிரியாரையும் சிறையில் அடைப்பித்தனர்,(குறிக்கப்பட்ட போதகர் பிணையில் சென்றபோது இயற்கை மரணமடைந்தார்).
புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் 1995 ஆம் ஆண்டு அக்கராயனில் கிறிஸ்தவ சபை ஒன்று தீயிட்டு கொழுத்தப்பட்டது(யாழிலிருந்து இடம்பெயர்ந்த சபை) போரின் இறுதிக் காலப் பகுதியிலும் பல்வேறு விதமான துன்பங்களை புலிகள் கிறிஸ்தவர்கள் மீது சுமத்தினர்.
இவ்வருடம் ஓகஸ்ட் மாதமளவில் மன்னார் பகுதியில் கிறிஸ்தவ சபை ஒன்றின் மீது தாக்குதல் தொடுக்கும் முகமாக சுமார் 2000 பேர் வரை கூடியிருந்த கூட்டத்தை பொலிஸார் அடித்து விரட்டினர்.
இறுதியாக ஊடகங்களின் பார்வையில் அகப்பட்டது கொஸ்வத்தை சம்பவம்.
மன்னாரில் அடக்கிய கலவரத்தை ஏன் கொஸ்வத்தையில் அடக்க முடியவில்லை என்பது தான் இங்கு பிரச்சனை?
ஏனெனில் இலங்கை எனப்படும் ஸ்ரீலங்கா சிங்களவர்களினதும் பௌத்தர்களினதும் நாடு.
இங்கு விழுந்த அடி கிறிஸ்தவர்களுக்கு விழுந்த அடியல்ல. தமிழர்களுக்கு எதிராக நடந்த வன்முறையாகும்.
புலிகளை வெற்றிகண்டதாக கூறப்படும் போரின் பின்னர் நிகழ்ந்த முதலாவது பெரிய இனக்கலவரமாக இதனை கருத இடமுண்டு.
ஏனெனில் அதிகமான சிறு சிறு கிறிஸ்தவ சபைகள் தமிழர்களால் உருவாக்கப்பட்டுள்ளதுடன், தமிழர்களைக் கொண்டதாகவும், அதிகமான போதகர்கள் தமிழர்களாகவும் உள்ளனர். என்பதை முதலில் தெரிந்திருந்தால் இது புரியும்.
மன்னாரில் நிகழ்ந்த சம்பவமானது, சங்கிலி மன்னனின் பட்டயத்திற்கு இரையாகிய 600 கிறிஸ்தவ இரத்த சாட்சிகளின் இரத்தம் கசியும் மண்ணில் கிறிஸ்தவர்களுக் கொதிராக மாற்றுக் கிறிஸ்தவர்கள், அதுவும் தமிழர்களுக்கு எதிராக தமிழர்கள் மேற்கொள்ள இருந்த கலவரம் அடக்கப்பட்டது ஒரு வகையில் போற்றத்தக்கது.
கொஸ்வத்தை உள்ளிட்ட தென்னிலங்கையின்(சிங்கள பகுதிகளில்) பல இடங்களிலும் நிகழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக் கெதிரான வன்முறைகளின் போது சிங்கக் கொடியுடன் பௌத்த துறவிகளும் நேரடியாக வெளிப்பட்டனர்.
இதே தேசிய கொடி தான் தமிழர்களின் பிரதேசங்கள் ஒவ்வொன்றும் ஆக்கிரமிக்கப்பட்ட போதும் பறக்கவிடப்பட்டதுடன், அதே காவி உடை தரித்த பௌத்த துறவயிடம் தான் ஆசீரும் பெறப்பட்டது.
இது போன்ற தேசியக் கொடிக்கு நெஞ்சை நிமிர்த்தி மரியாதை செய்தும், இலங்கை மக்களின் தேசியக் கொடி என்று கூறுவதும் எவ்வளவு பொருத்தம்.
ஆகவே இந்தக் தேசிய கொடியின் கிழ் நிலங்களை புலிகளிடம் இருந்து மீட்டது என்பது கூறுவது சரியா? அல்லது தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று கூறுவது சரியா?
ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு பயங்கரவாதம் தடையாக உள்ளதாக கூறி புலிகளை முற்றாக ஒழித்துக்கட்டிய நாட்டில் காவி உடைக்கிடையே பயங்கரவாதம் ஒழிந்திருப்பதை தேசியக் கொடியால் போர்த்தி மக்கள் மீது ஏவிடுகின்றது அரசு.
‘சிறுபான்மை என்ற சொல்லுக்கே இனி இடமில்லை” என்று ஜனாதிபதி கூறுவதன் அர்த்தம் இது தானா?
மிக விரைவில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று ஸ்ரீலங்காவில் இடம் பெறும் என்ற எதிர்பார்த்திருக்கும் இத் தருனத்தில் எல்லா விடயங்களையும் ஒருமித்தே நோக்க வேண்டும்.
அவசர அவசரமாக மக்களை மீளக் குடியமர்த்துவதற்கு இயற்ககை மீதுள்ள அச்சம் ஒரு காரணமாக இருக்க கூடும், அதே வேளை தேர்தல் மற்றும் பல அரசியல் நோக்கங்களுக்காகவும் மீள் குடியேற்றம், போக்குவரத்து மற்றும் சேவைகள் ஆரம்பிப்பு என மக்களை சந்தேஷத்தில் தினறவைக்கின்றது அரசு, ஆனால் எல்லாவற்றுக்கும் முடியாக(மகுடமாக) இருக்கும் உயர் பாதுகாப்பு வலய காணிகள் மற்றும் பாதுகாப்பு அனுமதியில் மட்டும் தளர்வு ஏற்படவேயில்லை.
இலகுவில் மாற்று மொழியை பயன்படுத்தும் மனப்பாங்கு கொண்ட தமிழ் மக்கள் இவ் விடயங்களில் ஏமாற்றமடைந்தால் ஜனாதிபதி கூறியது போன்று ‘சிறுபான்மை என்றே சொல்” எதிர்காலத்தில் இல்லாமற் போய்விடும்.
அதற்கு வசதியாக மாங்குளம் அபிருத்தி செய்யப்படவுள்ளது. ஏற்கனவே புலிகளிடமும் இத்திட்டம் இருந்தது.
புலிகள் இத்திட்டத்தை முன்னெடுத்தால் தமிழ் பாதுகாக்கப்பட்டிருக்கும், ஆனால் அரசு இத்திட்டத்தை முன்னெடுத்திருப்பதானது வவுனியாவரைக்கும் பரவியிருக்கும் சிங்கள மொழி தமிழர்களின் கோட்டைகளுக்குள்ளும் பரவும் என்பதே யதார்த்தமானது.
இதற்கிடையே ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளவுள்ள ஸ்ரீலங்காவில் தற்போதைய ஜனாதிபதி மகிந்தவிற்கு நிகரான ஒரு போட்டி வேட்பாளரை கண்டுபிடிப்பதில் கடினம். இதற்கு ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய கூட்டுப்படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சரத்பென்சேகாவைத் தவிர வேறு யாரும் இல்லை.
இராணுவ மயமாக்களில் சிக்கியிருக்கும் ஸ்ரீலங்காவில் பேரினவாதிகளின் விருப்பத்தை நிறைவேற்றுபவர் தான் வெற்றியடைய முடியும் என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தியிருக்கும் இவ் இராணுவ வெற்றியானது. ஜனநாயகத்தை சீரளிக்கும் தலைமையை உருவாக்க வழிவிடும்.
இதற்கு உரிய காலம் பிறந்துவிட்டது போன்ற ஒரு நிலைப்பாடாகவே சரத்பொன்சேகாவின் பதவிவிலகல் கடிதம் கையளிப்பும் நிகழ்ந்துள்ளது.
ஏற்கனவே இராணுவ சுதியில் இருக்கும் ஸ்ரீலங்காவின் பேரினவதிகளின் காதுகளை குளிர்மைப்படுத்தும் இராணுவ வெற்றிபிரதாபங்கள் தேர்தல் பிரசாரமாக கிடைக்கவுள்ளன.
ஆகவே ஸ்ரீலங்காவில் இனி வரப்போகும் ஆட்சியானது சர்வதிகாரத்தை அல்லது இராணுவ அந்தஸ்தை கொண்டதாக அமையும். எனவே புலிகள் இல்லாத இச் சூழ்நிலையில் சிறுபான்மையினங்கள் அரசை புகழ்ந்து சலுகைகளை அனுபவிக்க வேண்டியது தான். சிறுபான்மையினரின் கருத்துக்கள் வெறும் புரளியாகவே அமையும்.
ஆகவே கொஸ்வத்தை சம்பவம் போன்ற சம்பவங்கள் தமிழ் இனத்துக்கு எதிரான சிந்தனையாக பார்க்கப்படாதது போன்று, வேறு ஒரு தோற்றத்தில் தமிழினம் அழிவடைய வழிதிறக்கப்டுகின்றது என்பதை கூர்ந்து அவதானிக்க வேண்டும்.
யாழ்ப்பாணத்திலுள்ள நாவலர் மண்டபத்திற்கு பின்புறமாக அமைந்திருக்கும் நூதன சாலையை பார்வையிட்ட எனக்கு பெரிய ஒரு கவலை, எமது புராதன சின்னங்கள் இன்னும் எவ்வளவே பாதுகாக்க வேண்டியுள்ளதே என்று.
பாழடைந்த கட்டடம் போன்ற ஒரு ஒதுக்குப் பகுதியில் அவ் நூதன சாலை இருந்தது கவலைக்கு மிகப் பெரிய காரணம். ஆகவே நான் கேட்டேன் ஏன் இது இப்படியே இருக்கின்றது? வேறு புதிய பொருட்களை சேகரிக்க முடிந்ததா? என்று. கிடைத்த பதில் இருப்பதை மட்டும் பாதுகாக்கலாம் புதிய தொல்பொருட்களை கண்டுபிடிக்க அனுமதி இல்லை, ஆனால் பௌத்த அடையாளங்கள் தொடர்பான தொல்பொருள் ஆய்வுகள் தொடர்ந்து இடம் பெறுகின்றது என்பது தான் அந்த பதில்.
சிறுபான்மை என்ற சொல் இல்லாமல் போவதற்கு காலம் தூரமல்ல.
பிழைகளை சுட்டிக் காட்டவும் vincentjeyan@yahoo.co.uk

Posted by VincentJeyan 



Posted by VincentJeyan 

Posted by VincentJeyan 




FMM
JDS
NSLJA
RSF
UsTamil
Vincent Jeyan

