இந்திய பிரதிநிதிகளின் வருகை தமிழ் மக்களுக்கு நிம்மதியை ஏற்பத்தும் என்பது போல எம்மவர்கள் ஏன் இன்னும் நம்புகின்றனரோ?
தழிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் ஆயுத வடிவெடுத்து 30 ஆண்டுகள் கழித்தும் இறுதி நேரத்தில் கூட கைகொடுக்காத இந்தியா இனியும் கைகொடுப்பதற்கு என்ன இருக்கின்றது என்பதை எமது சுயபுத்தியில் சிந்திக்க வேண்டும்.
திரைக் கதைகளில் வருவது போன்ற ஒரு கதாநாயகனாக இந்தியா வந்து உதவும் என்று எம்மவர்கள் கனவு காண்பது ஏனோ புதிராகவே உள்ளது.
தமிழ் ஈழத்திற்கான தேவையும் தியாகமும் எம்மக்களிடமே உள்ளது எதற்காக இந்தியாவின் கையை எதிர் பார்க்கவேண்டும்.
ஒரு நாட்டின் ஆதரவு குறிப்பாக அண்டை நாட்டின் ஆதரவு அவசியம் தான்.
பிரதமர் அமரர் இந்திராகாந்தி மற்றும் முதலமைச்சர் அமரர் எம்.ஜி.ஆர் காலப் பகுதிக்குப் பின்னர் ஈழத் தமிழர்களின் பிரச்சனை தொடர்பாக இதயபூர்வமான தீர்வினை இந்தியா கொண்டிருக்கவில்லை. அவர்களின் கால பகுதிக்குப் பின்னர் பெரிய சக்திகளை அடக்குவதற்கு எம்மவர்களின் போராட்டத்தை பயன்படுத்தினர்.
இவ் இராஜதந்திர வலையில் சுதந்திரத்திற்காக போராட முன்வந்த எம் தாயக இளைஞர்கள் உட்பட இலங்கை இந்திய அரசியலும் சிக்கியதினால் எம் இனத்தின் விடுதலை கேள்விக்கு உள்ளாகத் தொடங்கியது.
இதனடிப்படையில் சகோதரப் படுகொலைகள் உட்பட விடுதலை பெற வேண்டிய இனம் தன்னைத்தானே சுடத் தொடங்கியது ஒரு சோகமாக தொடர, இலங்கை இந்திய ஒப்பந்த வேளையில் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி மீதான ஸ்ரீலங்கா சிப்பாயின் கொலை முற்சியை இரண்டு நாடுகளும் ஒற்றுமையாக மறைத்துக் கொண்டு. கொலைப் பழியை மட்டும் புலிகள் மீது சுமத்தி அதற்காக முழு தமிழ் இனத்தையும் வேடையாடுகின்றது இந்தியா.
இந்தியாவிடம் ஒரு கேள்வி மட்டும் உள்ளது. இந்தியா உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள்? என்பது தான்.
இதற்கு ஏற்றாற் போல் எம்மவர்களும் இந்தியா எமது மீட்பன் என்பது போல் அறிக்கையும் விடுவர்.
குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது அறிக்கைகளில் ‘ சந்திப்பு ஆக்கபூர்வமானதாக இருந்தது”, ‘அவர்கள் மிக உன்னிப்பாக கேட்டறிந்தார்கள்”, நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது”. போன்ற செற்தொடர்களை பாவித்து மக்களை ஏமாற்றுகின்றார்கள்.
அவருக்கு வாக்களிக்கவும் இவரைப் புறக்கணிக்கவும் என எமது கடைமைகளை மறந்து அண்டை நாட்டில் நடக்கும் தோர்தலில் ஈடுபடுவது எவ்வளவு பொருத்தமான விடயம்?
தழீழ மக்களுக்கு சார்பாக அண்டை நாட்டில் நடக்கும் கவணயீர்ப்புகள் உச்சாகத்தை தருபவை தான் அதற்காக அவற்றை முழுமையாக நம்பக் கூடாது.
தமிழக முதல்வர் கருணாதி தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்ததும் சங்கிலிப் போராட்டங்கள் நடத்தியதும் அவரின் செல்வாக்கை பரீட்சிப்பதற்கே என்று பலருக்கும் புரியவில்லை.
இதன் பின்னர் தனது பேச்சை கேட்டு ஜனாதிபதி ராஜபக்ஷ யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டார் எனக்கூறி தமிழக மக்களை ஏமாற்றிய தமிழக முதல்வர் கருணாநிதி தானது சில மணிநேர உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக கூறிய போது வன்னி மண்ணில் வயிற்றில் இருந்த கரு உட்பட முதியவர்கள் வரை கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர்.
இந்தக் கோமாளியின் குழு இலங்கை சென்று திரும்பியது அல்லாமல் 15 நாட்களுக்குள் சுமார் 58ஆயிரம் மக்கள் மீளக் குடியேற்றப்டுவர் எனவும் அறிக்கையிட்டது. தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைத்துவிடும் என்பது போல எம் மக்கள் சிந்திக்கின்றனர்.
ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி தமிழக அரசியல் வாதிகளை ‘கோமளிகள்” என்று கூறிய வார்த்தையை நிருபித்துவிட்டார்கள்.
மேலும் அகதி முகாம்களுக்கு சென்று பார்வையிட்ட போதும் வவுனியாவில் உள்ள அனைத்து முகாம்களுக்கும் இவர்கள் செல்லவில்லை.
(இக் குழு இலங்கையில் நின்ற போது தான் தடுப்பு முகாமில் மரம் முறிந்து விழுந்து இருவர் கை மற்றும் காலை இழந்ததுடன் குழந்தை ஒன்றும் காயங்களுக்கள்ளானது.)
இக் குழுவினர் அகதி முகாம்கள் தரமாக உள்ளது என்று கூறியிருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் தழிழகத்தில் இலங்கை அகதிகளுக்கான தங்குமிடம் மிகக் கேவலமாக இருக்கின்றது. பல வருடங்களாக பராமரிக்கப்டும் தமிழக அகதி முகாம்களில் பல குறைபாடுகள் இருக்கின்றன என்று அங்கு வசிக்கும் எம் உறவுகள் தெரிவிக்கின்றனர்.
மனிதப் பேரவலம் நிகழ்ந்த போது கண்ணை மூடிக் கொண்டிருந்த இந்தியா எதற்காக மீண்டும் ஒரு நாடகம் ஆடுகின்றது.
- நளினி-பிரியங்கா சந்திப்பின் மூலம் தமிழ் மக்களை திசைதிருப்பிய இந்திய இறுதியில் இராணுவ உதவிகளை வழங்கியது.
- சங்கிலி போராட்டம் நடத்தி நாடகம் காட்டிய கருணாநிதி யுத்தம் முடிவடைந்தது என கூறி தமிழக மக்களின் உணர்வுகளை அடக்கினார்.
- தற்போது தமிழக குழுவின் விஜயம்,கருணாநிதியின் 15 நாள் மீளக் குடியேற்ற புரளி?…
இலங்கையை மனித உரிமைகள் குற்றச் சாட்டு மற்றும் போரியல் குற்றத்திலிருந்து மீட்பதில் பெரும் பங்காற்றிய இந்தியா, தற்போது தழிழீழ அனுதாபிகள் என்று இனம் காணப்பட்டவர்களை தனது திட்டத்தில் பயன்படுத்துகின்றது.
இதன் மூலம் மேற்குலகில் தமிழர்களின் குரல்களை நசுக்குவதில் புதிய பாதையை வகுக்கின்றது இந்தியா.
மேற்குலகின் முன் தலைகுனிவடைந்துள்ள இலங்கை தனது நட்பை ஆசியாவில் நிலைநிறுத்த மேற்கொள்ளும் முயற்றியில் உள்ளது. இதற்கு இது போன்ற நாடகங்கள் பெரும் உதவியாக இருக்கும்.
அத்துடன் தழிழீழ அனுதாபிகள் மூலம் ஸ்ரீலங்காவும் தனது பிரசாரங்களை மேற்கொண்டு புலம் பெயர் தமிழர்களை நாட்டுக்கு வரவழைப்பதுடன், புலம் பெயர் தமிழ் சமூகத்தின் போராட்டங்களின் அரசியல் தாக்கத்தை குறைக்கவும், மேலும் புதிய முதலீடுகளை இலங்கையில் மேற்கொள்ள புலம் பெயர் தமிழ் சமூகத்தை தூண்டவும் முடியும் என்பது தான் இவர்களின் திட்டங்கள்.
அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை நிகழ்வுகளாக கருதாமல் கைதட்டாமல். எதற்காக என்று சிந்திக்க வேண்டும்.
மௌனமாக இருந்தது போதும் துணிந்து பிழைகளை சுட்டிக்காட்டி இராஜதந்திர வலைகளை அறுக்க வேண்டும்.
எமது விடுதலைக்கு நாம் போராடுவதை விடுத்து அடுத்தவனை நம்பாதீர்கள்.




FMM
JDS
NSLJA
RSF
UsTamil
Vincent Jeyan









0 Responses to “எதற்காக மீண்டும் ஒரு நாடகம். இராஜதந்திர வலையில் நாம்”