

சுவிற்சிலாந்தில் காணப்படும் இவ் நினைவுச் சின்னம் போர்வீரர்களை நினைவு கூருகின்றது. கிரபுன்டன் மாநிலத்தில் இத் துபி அமைந்திருக்கும் வளாகச் சுவர்களில் பிற நினைவு கற்களும் உண்டு, சுவிற்சிலாந்தின் தேசிய தினம் மாநில வாரியாக கொண்டாடப்படும் போது இவ் வளாகத்துக்குள் தான் முக்கிய கொட்டகை அமைக்கப்டுகின்றது. இதே போன்ற சூழ்நிலை மாவீரர்களுக்கு ஏற்படாமல் காப்பது ஒவ்வொரு தமிழரினதும் கடமை. படம் வின்சென்ற் ஜெயன்
கடந்த வருடங்களில் இடம் பெற்ற மாவீரர் தினத்திலும் இவ் வருடத்தில் இடம் பெற இருக்கும் மாவீரர் தினம் தொடர்பான அதிக அக்கறை ஸ்ரீலங்கா அரசிற்கும் புலிகளின் செயற்பாடுகளை உற்று நோக்குவோருக்கும் உள்ளது.
புலிகள் என்றொரு அமைப்பு இருந்ததற்கு ஆதாரம் கூட இருக்கக் கூடாது என்பது தான் அரசின் நோக்கம். அதனால் தான் விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்ட போராளிகளின் ‘உடல்களை யாரிடமும் கையளிக்கமாட்டோம் இவைகளை வைத்துக் கொண்டு அஞ்சலி அது இது என்று நினைவுபடுத்துவதற்கும் விரும்பத்தகாதவர்கள் இங்கு வருவதை நாம் விரும்பவில்லை” என்று இராணுவப் பேச்சாளர் உதயநானயக்கார ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ‘நாடுகடந்த தழிழீழ அரசு” என்ற புதிய நிலைப்பாடு, புதிய தலைவராக அறியப்பட்ட செல்வராசா பத்மநாதனின் கைது, மற்றும் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் இல்லை என்ற சர்ச்சை, உரையை யார் செய்வார்? என்ற கேள்வி, தற்போதைய புலம் பெயர் தமிழர்களின் ஈழம் தொடர்பான நிலைப்பாடு? என பல சந்தேகங்களுக்கு விடைகாணவும், புலம் பெயர் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை இனம் காணவும் இம் மாவீரர் தினம் உதவும் என எதிர்பார்க்கப்டுகின்றது. Continue reading ‘புலம் பெயர் மாவீரர் தினம் காலத்தின் தேவையை உணர்ந்து நடத்தப்படுமா?’




FMM
JDS
NSLJA
RSF
UsTamil
Vincent Jeyan




![Lazy Lass [eXPLoReD] Lazy Lass [eXPLoReD]](http://static.flickr.com/7083/7272226034_3d95aba441_t.jpg)



