விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் பாரிய மாற்றத்தை சந்தித்து வருகின்றது.
இராணுவமயமாக்குதலும், தமிழரின் சின்னங்களை அழித்தலும், பொத்த சிங்கள சின்னங்களை உருவாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற இச் சூழ் நிலையில் தமிழ் மக்கள் தமக்குள்ளான ஒற்றுமையை இழந்து தமக்குள் மோதிக்கொண்டிருக்கின்றனர்.
‘பேஸ் புக்’ மூலமாக அண்மையில் பகிரப்பட்ட விடயத்தை தங்கள் பார்வைக்கு சமர்பிக்கின்றேன்.
அகிம்சை பேசும் காந்தி பிறந்த பூமியில், புத்தன் உட்பட பல தெய்வங்களை உற்பத்தி செய்த தெய்வ பூமியில், பாவம் தீர்க்க புனித யாத்திரை செய்யும் மண்ணில், ‘ஆதிவாசி தேயிலை தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் உங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது,
உலகத்திற்கு முக்கியமான பூச்சியத்தை கண்டுபிடித்த பூமியில் மனித நேயம் பூச்சியத்தில் உள்ளதல்லவா?
இந்த நிலமையை நவீன ரக ஆயுதங்கள் மூலம் எம் இனம் அனுபவித்தது போக மீண்டும் அனுபவிக்க வேண்டுமா?
அல்லது போனால் இந்த அரபு நாடு ஒன்றில் நிகழ்ந்தது போல தூக்கிலிடப்பட வேண்டுமா?
ஏற்கனவே எமது பூமியில் தோண்டிய மனித புதைகுழிகள் போதும். போதும்
0 Responses to “இராணுவமயமாக்குதலும், தமிழரின் சின்னங்களை அழித்தலும்,”